சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்

பக்கிரியை பொருத்தவரை நாதஸ்வரம் என்ற கருவி விசித்திரமானது. ஒரு சாவியை போல் அவன் மனதை திறந்து புதைந்துள்ள ரகசியங்களை, சந்தோஷத்தை, கண்ணீரை, வலிகளை காட்டுகிறது. ஈர வேட்டி உளர்வதைபோல் மனம் எடையற்று போய்விடுகிறது. சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று மண் எடுப்பது போல் மூச்சு திணறுகிறது, உடல் முழுதும் கண் முளைத்தது போலும் தோன்றும்.  வாசிப்பில் ஆழ்ந்தால் உடலே இல்லமால் போய்விடுவதை உணர்கிறான். அந்த உணர்வில் பெறும் ஆனந்தத்தை அடைகிறான்.

யோகசூத்திரங்கள் துணையோடு ராஜ யோக சாதனம்

ராஜயோகத்தில் உடலையும், மனதையும் உறுதி செய்யாமல் மூச்சு பயிற்சி, தியானம் என மேலாம் படிகளில் வேகமாக ஏறினால் பல இன்னல்கள் வரும். அதனால் சாதனைகளில் முன்னேறாமல் தடைபடும்.

நோய், சோம்பல், சந்தேகம், ஊக்கமின்மை, விஷயப்பற்று, மதிமயக்கம் புலனின்பத்தில் அதிக பற்று, மனம் குவியாதிருத்தல், தவறான பார்வை, சாதனையிலிருந்து வழுவுதல், அடைந்த ஆற்றலை இழத்தல் என ஒன்பது விதமான தடைகளை யோக சாதகன் தாண்ட வேண்டும்.