நான் விருந்தளிக்கிறவன் அல்ல. நான் அவன் அப்பா. இல்லாத அவன் அப்பா நான்தான். அவன் தொட்டுணர்ந்த அப்பா. அவனைவிட்டு விலகியிருப்பதான என் பாவனையில், அவனது இதயத்துக்கும், ஆத்மாவுக்கும் வஞ்சனை செய்தேன் நான். ஆனாலும் உள்ளூற நான் அவன்சார்ந்த நெருங்கிய இணைப்பைக் கொண்டிருந்தேன், அதையிட்டு மேலதிகம் அக்கறையான சிந்தனையைச் செலுத்தவில்லை.