எந்த ஒரு புனைவும் ஒரு புதிர். அவரவர் சார்பு நிலைகளுக்கு ஏற்ப அதைப் புரிந்து கொள்கிறோம், அதன் படிப்பினையை எடுத்துக் கொள்கிறோம். எது சரி எது தவறு எது பொருத்தம் எது பொருந்தாது என்று யோசிக்கும்போது குழப்பம்தான் மிஞ்சுகிறது. கதையை முழுமையாய் புரிந்து கொள்ள முற்பட்டு வெவ்வேறு கோணங்களில் அதை அணுகியும், ஹிக்விட்டா ஆட்டத்தை அணுகிய முறை வாழ்வில் பின்பற்றக்கூடியதா, கீவர்கீஸ் லூஸியின் பிரச்சினையைத் தீர்க்க தெரிவு செய்த வழிமுறை சரியானதா என்பது பற்றிய ஒரு நிச்சயமற்ற நிலையைத்தான் அடையமுடிகிறது.
ஆசிரியர்: sgayatri
கவிதைகள் – ஒடிஷாவிலிருந்து
திரும்பிவரும்வரை மலர்ந்திரு
என்று நீ அந்தப் பூவிடம் சொல்கையில்
நான் முதல்முறை அழுவேன்..
வசந்தக்காற்றில் அதிரும் பூ
பூத்திருக்கையிலே வாடும் ஒரு நினைவைப் போல்
நீ இல்லாத வெம்மையில் வாடிப் போகும்.