திரள் நினைவு (Collective Memory) எனும் கருத்து குறித்து அதிக அளவு சிந்தனைகளைத் தரும் ரீஃப், அக்கருத்திற்குப் பெரும் அழுத்தத்தையும் வைக்கிறார். .. .. .. திரள் நினைவு என்பது “நிகழ்காலத்து வெளிச்சத்தில் பழங்காலத்தை புணரமைத்தல்”, அத்துடன் “சமூகங்களும் தேசங்கள் முழுமையும் அவற்றின் அடையாளத்தை வார்ப்படம் செய்வதற்கான வழியாகவும் இருக்கிறது”. .. .. .. ரீஃப் அடித்துச் சொல்கிறார், “வரலாற்றை நினைவுகொள்வதின் சாராம்சமாக இருப்பது, வரலாற்றுத் துல்லியத்தைவிட, அடையாளப்படுத்துதல் மற்றும் மனோபாவ நெருக்கமே எனும்போது வரலாற்று நுணுக்கங்கள் மற்றும் ஆழம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை”.