எழுத்துரு வாதம், பிரதிவாதம் – ஒரு விவாதம்

உருவகமாக கிரியாஉக்கி மூலம் ரசாயணத்தின் அகங்களை கொப்பளிக்க வைக்கும் அறிவியல் முறையை சொல்லலாம். இங்கே அந்த கிரியாஉக்கி ஒருநோக்கு படைத்த மெய்மையை வந்தடையும் இலக்கை கொண்ட சிந்தனையாளர்களின் தர்க்கமே. இந்த பகுத்தறிதலால் இதர நலிந்தக் கருத்துக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இது தான் இந்த முறையின் இயல்பு. அப்படி மெலிந்த தன் கருத்துக்களை நிராகரிக்கப்பட்டு தர்க்கம் ஒருவரை கடந்து செல்ல முற்படும் பொழுது அவர் இதை தனிப்பட்ட தோல்வியாகவோ, அவமானமாகவோ, தாக்குதலாக எடுத்துக் கொள்வது, அதனால் பிறர் மீது தனிப்பட்ட முறை தாக்குதல் நடத்தி அவரையும் நிலைகுலையச் செய்து தர்க்கத்திற்கே பங்கம் விளைவிப்பது, போன்றவை இந்த அறிதல் முறையின் மிகப் பெரிய கவனச் சிதறல். சில மாதங்களுக்கு முன் எழுந்த எழுத்துரு விவாதம் தமிழகத்தின் சிந்தனைத் தளங்களில் தன் அருவருப்பான முகத்தை வெளிக்காட்டியது.