தந்தையும் மகளும் போல் – இலக்கிய உறவு

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும் என்னும் என்னுடைய ஆய்வு நூல் மருதா பதிப்பக வெளியீடாகச் சென்னையில் 2005 இல் வெளிவந்திருந்தது. அவர் அந்த நூலைப் படித்துத் திண்ணையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பியும் இருந்தார். அக்கட்டுரையில் என்னைப் பற்றியும், என்னுடைய நூலின் தேவை பற்றியும், என்னுடைய துணிவையும் பாராட்டியிருந்தார். அப்படியெல்லாம் எளிதில் வெ.சா. பாராட்டிவிட மாட்டார். தகுதியான படைப்புக்கள் அவருடைய கண்களிலிருந்து தப்பியதே இல்லை.