நம்ம வீட்டுக்குள்ளேயே அம்மா அப்பா கைக்குள்ளையே இருந்து வளர்ந்திருப்போம், அவங்க எத நமக்கு காட்டுறாங்களோ அது தான் நம்ம உலகமா இருந்திருக்கும், ஆனால் நம்ம தனியா படிப்புக்காகவோ வேலைக்காகவோ அவங்க கைய விட்டு வெளிய வந்ததுக்கு பிறகு தான், இந்த உலகத்த நம்ம நம்மளோட பெர்ஸ்பெக்டிவ்ல பார்ப்போம், அப்படி பார்க்கும் போது உள்ளுக்குள்ள ஒரு சுதந்திர உணர்வு வரும், அந்த சுதந்திர உணர்வோட நம்ம எல்லா விஷயத்தையும் பார்த்து புரிஞ்சிக்கும் போது எல்லாமே நமக்கு புதுசா தெரியும்
