கத்தி வீரன் கதை

ஓர் நாக்கு பூச்சியை போல இருந்த என்னை கண்டு அப்பா ஏன் ஓடினார் என்பது யாருக்கும் இன்னமும் புரியாத புதிர். இதெல்லாம் நான் ஏதோ மற்றவர்கள் என்னிடம் சொல்லி நான் உங்களிடம் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். எனக்கு சிறு வயதில் ஞாபக சக்தி மிகவும் அதிகம். இப்போதுதான் பொண்டாட்டியின் பிறந்த நாள் மறந்து தொலைக்கிறது. இந்த சிறு வயது சம்பவம் எல்லாம் அப்படியே தொல்லைக்காட்சியில் ரிப்பீட்டில் பார்த்தது போல இன்னும் நினைவிருக்கிறது.

15

“இது இன்னும் மோசம். பொநுதான் இதன் காரணமா?” என் இருபது ஆண்டு ஊடக வாழ்க்கையில் நான் கேட்ட, படித்த பல சதிக்கோட்பாடுகள் நினைவிற்கு வந்து என்னை அந்த உரையாடலில் ஆர்வமிழக்க செய்தன. இங்கே வந்ததற்கு பதிலாக முன்னரே திட்டமிட்டபடி என் துணையுடன் வெளியே போயிருக்கலாம். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று சிந்திக்க தொடங்கினேன்.