பலரும் இதை ஒரு பழைய மத புத்தகம் என்றே நினைக்கிறார்கள். ஏதோ ஒரு தீவிரமான, சிக்கலான பெரியவர்கள் கூட புரிந்துகொள்ளச் சிரமப்படும் விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கீதை மிகவும் எளிமையான ஒன்றிலிருந்து தொடங்குகிறது: அர்ஜுனன், மிகத்திறமையான எதிரிகள் அஞ்சி ஓடும் ஒரு போர்வீரன். ஒரு போர்க்களத்தில் மிகுந்த குழப்பங்களுடன் நிற்கிறான். அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பயம், குழப்பம், சுய சந்தேகம், தர்மம் என்று பலவித மனச்சிக்கல்களுக்கு ஆளானவனாக தனது உறவுகளே பகையாக நிற்கும் களத்தில் கலங்கி நிற்கும் மாவீரன்.
