இறத்தல்- நீ அதை ஒரு பூனையிடம் செய்யக் கூடாது.
ஏனெனில், ஒரு காலி அடுக்குமாடி வீட்டில்
ஒரு பூனை என்ன செய்ய முடியும்?
சுவர்களின் மேல் ஏறுவதா?
மேசை நாற்காலிகளை உரசுவதா?
இங்கு எதுவும் வித்தியாசமாய்த் தோன்றவில்லை.
ஆனால் எதுவும் ஒரே மாதிரியாயில்லை.
எதுவும் நகர்த்தப்பட்டிருக்கவில்லை.
ஆனால் அதிக இடமிருக்கிறது.
இரவு நேரத்தில் விளக்குகளும் ஏற்றப்படவில்லை.
