படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து ஏடாவின் கையைப்பற்றிக் கொண்டிருந்த வில்லியமின் கண்களை நேராகப் பார்த்து, குதிரைப்பந்தயத்தின் வெற்றியை கணிதவியலின்படி தீர்மானிக்க முடியும் என்று நம்பி தான் செய்த பிழையான கணக்கீடுகளால் உண்டாகிய பெரும் நஷ்டத்தையும், அதை மறைக்க லவ்லேஸ் குடும்பத்தின் பாரம்பரிய வைரங்களை அடகு வைத்ததையும் பதிலுக்கு போலி வைரங்களை அந்த இடத்தில் மாற்றியதையும் ஏடா சொன்னபோது வில்லியம் அதிர்ந்தார்.
