ஸ்டேஷனர்ஸ் கம்பெனி

This entry is part 3 of 3 in the series காப்பிரைட் கதைகள்

“பாரடைஸ் லாஸ்ட்” என்ற பெரும் காவியத்தைப் பின்னாட்களில் இயற்றிய ஜான் மில்டன் என்ற கவிஞர், 1644 ஆண்டு அவர் கம்பெனியின் அனுமதி பெறாமல், தனது பெயரில், கருத்துச் சுதந்திரம் குறித்த  ஒரு பதிப்பை (Areopagitica) வெளியிட்டார். பண்டைய ஏதென்ஸ் நகரில் நிகழ்ந்த பேருரை ஒன்றின் பெயரையே தலைப்பாகப் பயன்படுத்தி இருந்தார். ஒரு உண்மை, பொய் ஒன்றை போட்டியில் வெல்லும். உண்மையை நிலைநாட்ட தணிக்கை தேவையில்லை என்றும், தணிக்கை செய்வது, அதிகாரத்தைக் குவிப்பதைத் தவிர வெறும் ஒரு பலனையும் கொடுக்காது என்று வாதாடினார்.