இருள் 

அழகை ஆராதிப்பவனில்லை என்று சொல்லிக் கொண்டு வருபவனும் அவனது பெற்றோரும் வீடு வாசல் தாவர சொத்துக்களை மதிப்பிடும் அலுவலர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஜாதகத்தில் கொஞ்ச தோஷம் என்று கழிக்கப்பட்டாள். எரிச்சலுற்ற அவள் வருகிற வரன்களைக் கழித்துக் கட்ட ஆரம்பித்தாள்.காலம் அவளிடம் ஏற்படுத்திய வடுக்களின் வலி அவ்வப்போது வாய் வழியே வந்து சீறும்.