உலகின் மிக மோசமான காற்றுத்தரம் உள்ள நகரங்களில் ஒன்று டில்லி. பல ஆண்டுகளாக, டில்லி அரசாங்கம் டீசல் பஸ்களை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, காற்று மாசைக் குறைக்க முற்பட்டு வெற்றி பெறவில்லை. டில்லியின் மெட்ரோ ரயில் இந்த முயற்சியின் ஒரு பங்கு. டில்லியைப்போல இந்திய நகரங்களான மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னையின் நிலையும் இதேதான். ஆனால், டில்லியின் முக்கிய தோல்விக்கான காரணம் குளிர்காலத்தில், சுற்றியுள்ள வயல்கள் எரிக்கும் 500 மில்லியன் டன் பயிர்த்தூர்.
