மலைக்கோயில்
தரிசனம் முடிந்து கீழிறங்கும்
பக்தர்களுக்கென காத்திருக்கின்றன
கொழுத்த கோயில் புறாக்கள்
Tag: குமார் சேகரன்
குமார் சேகரன் கவிதைகள்
விருப்பு வெறுப்பு
கலந்த சொற்களை
மெளன பெட்டிக்குள் போட்டு
தாழிட்டு பூட்டொன்றால்
பூட்டி வைத்தேன்
குமிழிகள் சுமக்கும் பால்யம்
எல்லோரும்
எல்லாமும் இருக்குமிடத்தில்
தனியாய்
தனிமையாய்
இருப்பதென்பது
பெரிய கொடுமை
குமார் சேகரன் கவிதைகள்
கூடிக் கொண்டே போகும்
அந்த சத்தத்தில்
உள்ளிருந்து வரும்
ஒரு சத்தத்தை
மெல்ல மெல்ல
கொல்கிறேன் இப்போது
அந்த இயல்வாகை மரத்தடியில் கொஞ்ச நேரம்
குரைத்துக் கொண்டே
துரத்தி வந்து
பின்னர் மீண்டும்
அந்த தெருவோர
இயல்வாகை மரத்தடியில்
சென்று படுத்துக் கொள்ளும்
அந்தப் பழுப்பு நிறத் தெருநாயை