நான் பல்வேறு கால கட்டங்களில் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்று படிக்கும் ஒரு கதை ‘பூமாதேவி’. தனது ஒவ்வொரு பருவத்திலும், அமெரிக்க பண்பாட்டு சூழலில் தனக்கான உலகை மகள் கட்டமைத்துக்கொண்டிருக்கும் காலத்திலெல்லாம் அதனை விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்க்கமுடிந்த தந்தையால், புராணங்களை அமெரிக்க நடைமுறை வாழ்க்கையின் உதாரணத்திலிருந்து தன்னால் இனிமேல் தன மகளுக்கு புரியவைக்க முடியாது என்று உணரும் நொடியில் அவளை இழந்துவிட்டதாக நினைக்கிறார். தனது மண் சார்ந்த, பண்பாடு சார்ந்த புராணம் அடுத்ததலைமுறைக்கு தொடர்பில்லாமல் போவது ஒரு நீண்ட நெடிய பண்பாட்டு சங்கிலியில் ஒரு தொடர்ச்சியை தன்னால் ஏற்படுத்தமுடியாமல் போனதால் ஏற்பட்ட இயலாமையின் வலியல்லவா அது?