தமிழ் வருடப் பிறப்பு என்றாலே தாமுவுக்குக் கொண்டாட்டம் தான். அம்மா மாங்காய் போட்டு வெல்லப் பச்சடி செய்வாள். அது அவனுக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்று. அதில் இனிப்பு புளிப்பு காரம் போன்ற அறுசுவைகளும் இருக்கும். ‘இதே மாதிரி நம்ம வாழ்க்கையிலயும் சந்தோஷம் ஏமாற்றம் ஆச்சர்யம் வருத்தம் எல்லா அனுபவங்களும் கலந்து வரும். அதையதை அப்படியே ஏத்துக்கணும்கறதுக்கு அடையாளமாதான் இதை பண்றோம்’ என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.
ஆசிரியர்: சித்ரூபன்
1/64, நாராயண முதலி தெரு – 3
சுந்தரவல்லி ஓர் அலங்காரப் பிரியை. சிமிட்டி நிறத்திலான சின்னாளம்பட்டுப் புடவையை மடிசாராக உடுத்திக் கொண்டாள். வசுதா திருமணத்தின் போது செலவோடு செலவாக வாங்கிய ‘கல்யாணி கவரிங்’ சங்கிலி, வளையல்களை அணிந்து கொண்டு, ‘ஆஃப்கான் ஸ்நோ’வையும் ‘குட்டிக்கூரா பவுடரை’யும் பூசிக் கொண்டாள், சிறிய கைக்குட்டையை இடுப்பில் செருகிக் கொண்டு, காதோரம் தலைமுடியை ஸ்டைலாகச் சுருட்டி விட்டுக் கொண்டாள். நான்கு மணிக்கே புறப்படத் தயாராகி விட்டாள்.
1/64, நாராயண முதலி தெரு – 2
பூக்கடை காவல் நிலையத்தின் அருகில் சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் ஆலயங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி அமைந்திருக்கும். இரண்டையும் சேர்த்து ‘பட்டணம் கோவில்’ என்று அழைப்பர். அந்தச் சிவன் கோவிலில் பிரம்பராம்பிகை சன்னிதி எதிரே ‘அனுபூதி மண்டபம்’ என்று ஒன்றுண்டு. அங்கு ‘சிவனடியார்கள் பண் இசைக் குழாமின்’ வருடாந்திர விழா சுதந்திர தினத்தன்று நடப்பது வழக்கம். அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு குழுக்கள் பக்திப் பாடல்களை வாத்தியக் கருவிகளோடு இசைப்பர். தருமபுரம் சுவாமிநாதன், பித்துக்குளி முருகதாஸ் போன்ற பிரபலங்களும் அதில் கலந்து கொள்வது வாடிக்கை.
1/64, நாராயண முதலி தெரு
பூக்கடை காவல் நிலையத்தின் அருகில் சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் ஆலயங்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி அமைந்திருக்கும். இரண்டையும் சேர்த்து ‘பட்டணம் கோவில்’ என்று அழைப்பர். அந்தச் சிவன் கோவிலில் பிரம்பராம்பிகை சன்னிதி எதிரே ‘அனுபூதி மண்டபம்’ என்று ஒன்றுண்டு. அங்கு ‘சிவனடியார்கள் பண் இசைக் குழாமின்’ வருடாந்திர விழா சுதந்திர தினத்தன்று நடப்பது வழக்கம். அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு குழுக்கள் பக்திப் பாடல்களை வாத்தியக் கருவிகளோடு இசைப்பர். தருமபுரம் சுவாமிநாதன், பித்துக்குளி முருகதாஸ் போன்ற பிரபலங்களும் அதில் கலந்து கொள்வது வாடிக்கை.