நண்பனொருவனை
நீண்ட நாட்கள் பிறகு
சந்திக்க நேரிட்டது.
எப்ப கல்யாணம்?
எங்க கல்யாணம் நடந்துச்சு?
காதல் திருமணமா?
ஏன்டா பத்திரிக்கை அனுப்பல?
பொண்ணு எந்த ஊரு?
வேலைக்கு போறாங்களா?
எத்தன புள்ளங்க?
பல கேள்விகள்,
பல பதில்கள்,
பல விசாரிப்புகள்.
இனி
கேட்பதற்கு எந்த
கேள்விகளும் இல்லாமல்
சந்தோசமாக உணர்ந்து
விடைபெறுகையில்
விவாகரத்துக்கு விண்ணப்பித்திருப்பதாக
தயங்கியபடியே சொன்னான்.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

நண்பனொருவனை