எங்கேயோ கை வளையலில்
கணீரென ஒலித்தது
மூக்குத்தியில் மினுங்கியது.
மஞ்சள் வெயில் பட்டு
புத்தரின் காதணியில் ஊஞ்சலாடியது
வார் செருப்பின் மென் நடையில் கரணமடித்தது .
எங்கேயோ கை வளையலில்
கணீரென ஒலித்தது
மூக்குத்தியில் மினுங்கியது.
மஞ்சள் வெயில் பட்டு
புத்தரின் காதணியில் ஊஞ்சலாடியது
வார் செருப்பின் மென் நடையில் கரணமடித்தது .
மீட்டெடுக்கும் துணுக்குகளில்
மக்களையோ
சரியாகப் பொருத்திய
முழுமையையோ பற்றவியலாது
எவராலும்
இத்தனை விரிசல்கள் தெரிகையில்
காத்திரமாக மீள்வது ஏதுமிராது