இலக்கிய ஏஜெண்டுடன் ஒரு சந்திப்பு 

கதாநாயகன் யாரு? அனாதயா சென்னைக்கு வந்து, பாத்திரக்கடைல வேலை பாத்து, அடி ஒதயெல்லாம்பட்டு, துபாய் போய் சம்பாரிச்சி, பெரிய ஆளாகி, சிங்கப்பூர்ல போய்ப் பாத்திரக்கடை வைக்கிறாரா? அப்புறம் பெங்களூர்ல கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிக்கிறாரா? தமிழ் மீடியத்துல படிச்சவங்களுக்கு மட்டுந்தான் வேல குடுக்கிறாரா? தீம் ரொம்ப நல்லாருக்கே! இப்டில்லாம் பாசிட்டிவ்வா எழுதினாத்தான் இளைஞர்க படிக்கிறாங்க.