தூண்டில் மீன்கள்

மீன் கிடைக்காத கோபமும் சேர்ந்துகொள்ள அவன் சாப்பிட உட்கார்ந்ததும், “புள்ளைக்கு வயசு ஏறிட்டே போவுதுங்க. இன்னும் எத்தன நாளுக்கு இப்பிடியே மீன் புடிச்சுட்டே வாழ்க்கய ஓட்டிட்டு இரிக்கலாம்னு நெனச்சுட்டு இரிக்கீங்க?  கல்யாணம் காச்சினு நாலு பக்கம் பொண்ணக் கூட்டிட்டுப் போவும்போது இப்பிடி மூளியாட்டம் கூட்டிக்கிட்டுப் போனா பாக்குறவங்க என்ன நெனப்பாங்க? யாராச்சும் பொண்ணு கேட்டு வருவங்களக்கும்? கொஞ்சமாச்சும் நகநட்டு பொண்ணு கழுத்துல வேணுமில்ல? செயிக்கிள் கடைலதா வருமானம் இல்லேனு தெரியுதுல்ல வேற ஏதாச்சும் வேலை பாக்கலாமல்ல? எவ்வளவுதா நாஞ்சொல்றது.