மூன்று நாய்கள்

இப்படியாகத்தான் அந்தத் தெருவை நாய்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அவற்றின் ஆளுகைக்கு கீழ் தெருவின் ஒழுங்கு கொண்டுவரப்பட்டது. சீரில்லாமல் இருந்த நிர்வாகத்தைச் சரிசெய்ய முற்பட்டு, பல்வேறு முன்னேற்றச் சரத்துகளைத் தயாரித்து வைத்திருந்ததை இப்பொழுது வசதியாக மறந்தன. நேரக்கட்டுப்பாடு விதித்தன, இரவு நாய்களுக்கும், காலை மனிதனுக்கும் என பிரிக்கப்பட்டது.

சொம்பு

நவாப்பழ மரத்தை ஒட்டிய அறையில் தான் இருவரும் தங்கள் உடலை உணர்ந்தார்கள். நவாப்பழக்கறை படிந்த ராணியின் மென் உடலின் கறையைச் சுத்தம் செய்வான் சந்திரன். அவன் மனதின் கறையை அவள் துடைத்தெடுத்தாள்.