Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

தவறாக விதிக்கப்பட்ட சாபம்

மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

தான் யார், தனது பிறப்பு எப்படிப்பட்டது என்பது தெரியாத காரணத்தால் ஒருவன் தன் பிறப்பில் இறந்து அவமானங்களை சந்திக்கவேண்டிய நிலையை யோசித்துப் பாருங்கள்! சூரியபுத்திரனான கர்ணன், சிறு வயதில் இருந்தே இந்த ஒரு காரணத்திற்காக பல அவமானங்களை சந்தித்தான்.

குந்தி, தனக்கு ரிஷி துர்வாசர் கொடுத்த வரத்தை விளையாட்டுத்தனமாக பரிசோதித்து பார்க்க அதன் விளைவாக பிறந்தவன்தான் கர்ணன். பிறப்பிலேயே குந்தி அவனை பிரிந்துவிட தேரோட்டியின் மகனாக வளர்ந்தான் கர்ணன். தேரோட்டியின் மனைவியான ராதை அவனை பாசமுடன் வளர்த்ததனால் ராதேயன் என அழைக்கப்பட்டான். சத்ரியனாக பிறந்தாலும் தேரோட்டியின் வீட்டில் வளர்ந்த காரணத்தினால் சூத புத்திரன் எனவும் அழைக்கப்பட்டான்.

அனைத்து வகையான ஆயுத பிரயோகமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் குரு துரோணாச்சார்யரை அணுகி தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். ஆனால் , அவரோ தான் குரு வம்சத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கற்றுத் தருவேன் எனவும், கர்ணன் சூத புத்திரன் என்பதால் தன்னால் அவனை சீடனாக ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் மறுத்துவிட்டார் அவர். அதனால். கர்ணன் துரோணரின் குருவும், சத்ரியர்களை வெறுத்தவருமான ஸ்ரீ பரசுராமரை அணுகினான்.

அவரிடம் தான் ஒரு பிராமணன் என சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு தனக்கு அஸ்திர பிரயோகம் கற்றுத் தரும்படி வேண்டினான். அவனது பணிவான வேண்டுகோளைக் கண்டு அவரும் அவனை தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, அவனுக்கு பயிற்சி தரத் துவங்கினார். அவனது நடவடிக்கைகளால் கவரப்பட்டு மிகுந்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் எனக் கருதப்பட்ட பிரம்மாஸ்திரம் மற்றும் பார்கவாஸ்திரங்களையும் அவனுக்குப் பயிற்றுவித்தார்.

ஒருநாள், காட்டில் சென்று கொண்டிருக்கையில் களைப்பாய் உணர்ந்த பரசுராமரை உறங்க விரும்பினார். உடனிருந்த கர்ணன், தனது தொடையில் தலை வைத்து உறங்குமாறு கூறினான். அதை ஏற்று, அவனது தொடையில் தலை சாய்த்து உறங்கினார். அவர் உறங்கத் துவங்கி சிறிது நேரத்தில் ஒரு வண்டு அவனது தொடையைக் கடிக்க, தான் அசைந்தால் குருவின் தூக்கம் களைந்து விடுமோ என வலியை பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனது தொடையை கடித்து ஊடுருவி மறுபக்கம் வழியே வெளிவந்தது வண்டு. அந்த காயத்தில் இருந்து வெளிவந்த அவனது ரத்தம் தரையில் ஓடத் துவங்கியது. அப்பொழுதும் அவன் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

தரையில் ஓடிய அவனது இரத்தம் பரசுராமரை நனைக்க அதனால் உறக்கம் களைந்து எழுந்தார். அங்கே கர்ணனின் தொடையில் இருந்து ரத்தம் பெருகி ஓடுவதை கண்டவர் என்ன நடந்தது என்பதை உணர்ந்துக் கொண்டார்.

கோபத்துடன் எழுந்த அவர் “ராதேயா! சத்ரியர்கள் மட்டுமே இத்தகைய பெரும் வலியை பொறுத்துக் கொள்ள இயலும். பிராமணர்களால் இத்தகைய வலியை எப்பொழுதும் பொறுத்துக்கொள்ள இயலாது. உண்மையை கூறு யார் நீ?” என வினவினார்.

ஆயுத பிரயோகம் கற்றுக் கொள்ள வேண்டியே தான் பிராமணன் என பொய் சொன்னதாகக் கூறி அவரிடம் மன்னிப்பு வேண்டி நின்றான் கர்ணன்.

“என்னிடம் பொய் கூறி நீ கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் உனக்கு மிக தேவையான சமயத்தில் மறந்து போகும்!” என சாபமிட்டார்.

அவன் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் அவனுக்கு தேவையான நேரத்தில் மறந்து போனது.


துரியோதனனின் நம்பிக்கை

துரியோதனன் என்னும் பெயரை கேக்கும் பொழுதும் நம் முன் பல எதிர்மறை எண்ணங்கள்தான் தோன்றும். துரியோதனன் என்னும் பெயரின் அர்த்தமே மோசமான வீரன் என்பதாகும். ஆனாலும், அவனிடம் சில நல்ல குணங்கள் இருக்கத்தான் செய்தன. தன் மரணம் வரை போரிட்ட உண்மையான சத்ரியன். மிக சிறந்த “கதை” வீரன் மற்றும் பலராமனுக்கு பிடித்த சீடனும் கூட. அதே போல், நட்பை மிகவும் மதித்து கர்ணனுக்கு வேண்டியதை செய்தவன்.

குரு வம்ச இளவரசர்களான கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் குருகுல காலம் முடியும் தருணத்தில் அவர்கள் கற்றுக் கொண்ட வித்தைகளை மக்கள் முன் வெளிப்படுத்தும் வண்ணம் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். வில்வித்தையில் சிறந்த அர்ஜுனன் தன் அஸ்திர திறமையால் மக்களை கட்டிப் போட்டிருந்தான்.

அந்த நேரத்தில், அவனைப் போன்றே இளமையாகவும், சிறந்த வலிமையுடனும் தோன்றிய ஒருவன் அங்கே வந்தான். அதுவரை அர்ஜுனன் செய்த அனைத்து வித்தைகளையும் இவனும் எளிதாக செய்தான். அர்ஜுனனை தன்னுடன் நேருக்கு நேர் மோதுமாறு அழைத்தான். அதே நேரத்தில் கிருபாச்சாரியார், அர்ஜுனனுடன் மோதும் முன் அவனது பிறப்பை பற்றி கூறுமாறு கேட்டார்.

இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன் எழுந்து ” அவன் செய்த வித்தைகளை பார்த்து அவன் சத்திரியன் எனத் தெரியவில்லையா? அவன் யார் எங்கிருந்து வருகிறான் என்பது இங்கே முக்கியமில்லை. அவனது திறமை மட்டுமே முக்கியம். இருந்தும் அவன் இளவரசனாகவோ அல்லது அரசனாகவோ இருப்பது முக்கியம் என்றால் , இங்ஙனமே அவனை அங்க தேச அரசனாக நியமிக்கிறேன்” என்றான்.

பின், அவனது தந்தை மற்றும் பீஷ்மரின் அனுமதி பெற்று, அங்கேயே கர்ணனை அங்க தேச அரசனாக நியமிக்கும் சடங்குகளை துவங்கினான். அந்த சடங்குகள் முடிந்த தருணத்தில் அங்கே ஒரு வயதான தேரோட்டி பயந்து கொண்டே வந்தார். அவரைக் கண்டதும் கர்ணன் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரது காலில் விழுந்து வணங்கினான். அதைக் கண்டா பீமன் இடி சிரிப்புடன் ” நீ தேரோட்டியின் மகனா? உன் தந்தையின் சாட்டைகளை எடுத்துக் கொள். அங்க தேசத்தை ஆள மட்டுமல்ல , அர்ஜுனனின் அம்புகளால் கொல்லப்படுவதற்குக் கூட உனக்கு தகுதியில்லை” என்றான்.

இதைக் கேட்ட துரியோதனன் “விருகோதரா! இத்தகைய வார்த்தைகளை நீ பேசுவது அழகல்ல. அவனது கவசத்தையும், குண்டலங்களையும் பார். இந்த உலகையே ஆளத் தகுதி வாய்ந்தவன் அவன். நதி மூலமும் ரிஷி மூலமும் பார்ப்பது தவறு” எனக் கூறினான்.

அதே சமயத்தில் விழா முடிய , துரியோதனன் தன் நண்பனை அழைத்துக் கொண்டு சென்றான்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை

ஏகலைவன் பகைவனுக்கும் அருள்வாய்!
Exit mobile version