
கோடைப் பகல் —
வெண்ணொளி உருக்காலை.
தெரிவிக்காது ஊர்ந்தன
கருமேகங்கள்.
பூரிப்பின் விசைகள்தான்
எத்தனை !
மண் மணத்தைக்
கடைந்து பரப்பும் காற்று.
சன்னதமாடும் மரங்கள்.
இடியொலி முழங்க
திரை திறந்தது.
காட்டு யானைகளைப் போல
மறைந்து ஒளிந்தன மேகங்கள்.
நாடகம் சட்டென முடிந்தது.
அனாதியாய் பயணிக்கும்
ஒளி, வெளி நிறைத்து
மீண்டும் ஒளிர்ந்தது திரை.
