Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

வெளியும் உள்ளும்

புராதன வெளியில் வந்திறங்குகின்றன
வலசைப் பறவைகள்.
வரப்புகளில் தேங்கும் நீரில்
சுற்றிலும் புல்வெளியில்
அவை தனித்துப்
பொருத்தமற்று தோன்றுகின்றன.

பறவைகள் ஒன்றை ஒன்று
பார்த்து நிற்கையில்
புல்வெளியின் பரப்பில்
மார்கழி இரவின் பனி
காலைக் கதிரவனின் வெம்மையில்
மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது.

Exit mobile version