Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

அடைக்கலம்


அடைக்கலம்
கண்களின் கலவரத்தில்
காதல் உண்டேன்
காற்றின் கலந்தோசை
சுடரில் விழுந்து
சூரிய ஒளியாய் ஆனது
இமையின் இலையசைவில்
இருக்கையில் இளைப்பாறினேன்
காலை மாலை எந்நேரமும்
கருக்கொண்டு வளர்ந்தேன்
கடலலையின் மேல்
நடை பழகினேன்
காற்றின் மெளனத்தில்
மொழி பயின்றேன்
கண் எட்டாத புள்ளிவரை
ஓடி மறைந்தேன்
சட்டங்களற்ற ஜன்னல்கள்
செய்து முடித்தேன்
சாலைகளற்ற வழியில்
வருங்காலம் தேடினேன்
உயரத் தொங்கும் ஒட்டடை
நூல் பிடித்தேறி உன்னிடம்
அடைக்கலம் புகுந்தேன்
Exit mobile version