வண்ண நிலவனின் புத்தம் புதிய தொடர் நாவல் சொல்வனத்தில் வெளிவரப் போகிறது. தொடர் நாவலின் தலைப்பு:’ காகித சாம்ராஜ்யம்’
இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் சொல்வனம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது
சொல்வனத்தில் வண்ண நிலவனின் நாவல், ’எம். எல்’ பிரசுரமாகியது. சொல்வனம் வெளியிட்ட முதல் நாவல் தொடர் அது. அரசியல் நாவல்கள் சமீப காலத்தில் நிறையவே தமிழில் வெளி வந்துள்ளன. அவற்றிலிருந்து வேறுபட்டதாகவும், சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஏராளமான அன்றாட நடவடிக்கைகள் பற்றிய விவரணைகளின் செறிவோடும் அந்த நாவலை நடத்தி இருந்தார் வண்ண நிலவன்.
புத்தம் புதிய நாவலை ஆவலுடன் எங்களுடன் நீங்களும் எதிர்பார்க்கலாம்.
மேலும்:
எழுத்துக்காரர் வண்ணநிலவனுடன் சில நிமிடங்கள் . . .
