Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

முனுசாமி தாத்தா

பீடி கையோடு
சுற்றித் திரியும்
தாத்தா
பேரன் உடனிருந்தும்
பீடியையே
பற்ற வைப்பார்
தொற்றிக்கொள்ளும் புகை
நோயை உருவாக்கும் என தாத்தாவிடம்
பலர் போதித்தும் பலனேயில்லை
மாரியாத்தா கோயிலிலே
பால் குடம் எடுக்கையில
சாமியாடி வந்து
சேதி சொன்னா மாரியாத்தா
பேரன்யிருக்கையில
பீடி நெடி வந்துச்சுன்னா
நோய்க்கொண்டு
போகும்முன்னே
பேரன நான் கொண்டுபோவேன்னு
சக்தியுள்ள தெய்வம்
நம்ம குலத்தைக் காக்கும்
மாரியத்தா
கும்புடுக்கோன்னு
முப்பாட்டன் பேச்சைக்
கேட்டு வாழ்ற
முனுசாமி பாட்டன்
பீடிய விட்டொழிஞ்சு
வெகு நாட்களாயிடுச்சு
நினைச்சத சாதிச்சிட்டோம்ன்னும்
ராவெல்லாம் இருமல்
சத்தம் இல்லேன்னும்
நிம்மதியா தூங்குறா
பொய்சொல்லி சாமியாடிய
கங்கம்மாப் பாட்டி

Exit mobile version