Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

சூர்யமித்திரன் கவிதை

கனவுகளின்
போர்வைக்குள்
காட்சிகள் நகர
வீதிதோறும்
நீர்த்தடம்
சிறுகுன்றின்
மீதேறி
சுற்றும் பார்த்து
பாயும் வெள்ளத்தின்
நதிமூலம்
ஆராய்கிறது
தூக்கத்துமனம்.

மணித்துளிகளில்
காட்சி மாறி
பனிப்போர்வைக்குள்
பதுங்கும்
கனவுத்தொடர்ச்சி
நடுங்கும் குளிரில்
உடம்பெல்லாம்
கம்பளி இழைகள்
ஊடோடிய பருத்தி
இழை சால்வையில்
சம்மணமிட்டது
கலைந்த கனவு.

Exit mobile version