Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2)

(பகுதி 1 இங்கே இருக்கிறது)

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரொனா வைரஸ்ஸுக்கும், கல்லூரி வகுப்பை கட்டடித்துவிட்டு சினிமா பார்க்கப்போன நான்கு கல்லூரி மாணவர்களுக்கும், கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீசுக்கும், சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் ஒரு மணிக்கூண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ? பல வருடங்களாகச் சொல்வனம் தளத்திற்கு வந்து போகும் வாசகர்களுக்கு இவைகளுக்கிடையே உள்ள தொடர்பு உடனே நினைவுக்கு வரலாம். இவையெல்லாம் இவ்வுலகில் வளைய வந்து கொண்டிருக்கும் பல்வேறு சிந்தனைச் சோதனைகளில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்பதுதான் அந்த தொடர்பு. நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிவந்த 12 பகுதிகள் கொண்ட ஒரு தொடரை இன்னும் இரண்டு பகுதிகள் சேர்த்து, நிறைய மெருகேற்றி ஒரு மின் புத்தகமாக பதிப்பித்திருந்தோம். இப்போது அந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறோம். இந்தப் புதிய புத்தகத்தைச் சொல்வனம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி உங்கள் ஆதரவை நாடுவதே இக்கட்டுரையின் நோக்கம். 

பதினான்கு அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகம் தத்துவம், கணிதம், கணினியியல், இயற்பியல், பெண்ணியம், வணிகவியல், மருத்துவம், ஜனநாயகம் முதலிய பல துறைகளில் புகுந்து ஆங்காங்கே நிலவும் பிரச்சினைகளை அலசுகிறது. வாரக் கணக்கில் குடும்பத்துடன் வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் இந்த சமயத்தில் மிக எளிய நடையில் பள்ளிக் குழந்தைகள்கூட புரிந்து கொள்ளும் வடிவில் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், சுவையான விவாதங்களுக்குத் தீனி போடும். அமெஸான் நிறுவனம் காகித வடிவிலும் புத்தகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறது. புத்தகத்தை வாங்குவதற்கான இணைப்புகள் இதோ: 

அமெசான்: https://tinyurl.com/TESVAmazon
கூகிள்: https://tinyurl.com/TESVGoogle

இந்தியாவில் பதிப்பகங்கள் திரும்ப இயங்க ஆரம்பித்தவுடன் சில நூறு பிரதிகள் அச்சடித்து ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் மூலம் விநியோகிக்க இருக்கிறோம்.  200 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலையை இந்தியாவில் $2.99 என்றும், பிறநாடுகளில்  $3.99 என்றும்‌ நிர்ணயித்திருக்கிறோம். புத்தகத்தை விற்பதில் இருந்து கிடைக்கும் லாபமனைத்தும் நூறு சதவீதம் சொல்வனம் தளத்தைப் போய்ச்சேரும். சுய முயற்சியில் ஓரளவு தரமான ஒரு புத்தகத்தை பிரசுரிப்பது என்பது, எவ்வளவு கடினம் என்பது இந்த இரண்டு (தமிழ், ஆங்கிலம்) அனுபவத்தின் மூலம் புரிய வந்தது. 

மூன்று வருடங்களுக்கு முன் தமிழ் புத்தகத்தை அறிமுகப்படுத்த எழுதிய இந்த கட்டுரையில் இருக்கும் அதே கோரிக்கைகளை வாசகர்கள் முன் திரும்ப வைக்கிறோம்:

  1. புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கி படித்துப் பாருங்கள். கூகிள்/அமெஸான் இரண்டு தளங்களில் உங்களுக்கு எதன் வழியாக வாங்குவது சுலபமோ அதன் வழியே வாங்குங்கள். முடிந்தால் இன்னும் பத்து  பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு பரிசாக வழங்குங்கள்.
  2. ஒரு நாவலை படிப்பதுபோல் விறுவிறுவென்று படித்து முடிக்க முயலாமல், முன்னுரையில் சொல்லியிருப்பதுபோல், மெதுவாக புத்தகத்தைப் படித்து, இணைய தளங்களில் புத்தகத்தின் குறை நிறைகளை விமரிசனம் செய்யுங்கள். நானும், சொல்வனம் குழுவினரும் எதிர்காலத்தில் பிரசுரிக்க இருக்கும் புத்தகங்களின் தரத்தை உயர்த்த உங்கள் விமரிசனங்கள் மிகவும் உதவும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் புத்தகத்தை வாங்கிப் படித்து விமர்சிக்குமாறு கொஞ்சம் விளம்பரம் செய்யுங்கள்.
  3. இந்தப் புத்தகத்தை நிச்சயம் படித்து ரசித்து விவாதிப்பார்கள் என்று உங்களுக்குத் தோன்றும் ஒரு சில ஆசிரிய / மாணவ /மாணவிகளின் முகவரிகளை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவியுங்கள். அச்சுப் புத்தகம் வெளிவந்தவுடன் எங்கள் செலவில் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்ப முயற்சிக்கிறோம்.

அன்புடன்
சுந்தர் வேதாந்தம்

Exit mobile version