[stextbox id=”info” caption=”The Rise of the Planet of the Apes”]
”நாம் நம்மைவிட பரிணாம வளர்ச்சி குறைவாக உள்ள ஒரு மிருகத்தை மேம்படுத்துவதனால் அது நமக்கு ஆபத்தை விளைவிக்கும்”, என்ற பயம் மேற்கத்திய கலாச்சாரத்தில் திரும்பத் திரும்ப பார்க்கக் கிடைக்கும் ஒன்று. “Frankenstein Fear” என்று இதைச் சொல்வார்கள். கொஞ்சம் கவனித்தால் கூட போதும், இந்தப் படத்தின் உளவியலை ”Frankenstein Fear” பாதித்திருப்பதை உணரலாம். மேலும், இந்தப் படம் பல பத்து ஆண்டுகளுக்கு முன் இதே தலைப்புடுன் வெளியான பிரபல ஆங்கிலப் படத்தின் மறுஆக்கமே. ஆக, மேற்கத்திய கலாச்சாரத்தில் இந்த பயம் மிக வலுவாக ஊன்றியுள்ளது என்றும் கருத இடமுண்டு.
ஆனால், இத்தகைய ஆராய்ச்சி தற்காலத்தில் உண்மையில் நடைபெறுகிறதா?
ஆம்
இதனால் நமக்கேதும் ஆபத்துண்டா?
உடனடியாக அப்படி ஒன்றும் நடக்காது.
பொதுவாக நமக்கெல்லாம் இத்தகைய கேள்விகளும் அதன் விடையையும் தாண்டி இன்னொரு கேள்வி ஒன்றையும் விஞ்ஞானிகள் எழுப்புகின்றனர். இத்தகைய ஆராய்ச்சிகளால் நாம் ஏதும் அற மீறல்களை நிகழ்த்துகிறோமா? இந்த கேள்விகளையெல்லாம் பேசும் இந்தக் கட்டுரையை படியுங்கள்.
[stextbox id=”info” caption=”பூமிக்கு இரண்டு நிலவுகள்?!”]
பூமிக்கு ஒரு காலத்தில் இரண்டு நிலவுகள் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். காலப்போக்கில் சிறிய நிலவு பெரிய நிலவுடன் மோதி அதனுள் ஒடுங்கி இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இப்படி ஒரு சாத்தியம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் நிலவு குறித்த பல ஆராய்ச்சிக்கான சாத்தியங்களை இந்தக் கூற்று ஏற்படுத்துயுள்ளது என்றும் சொல்கின்றனர். எது எப்படியோ, ஒரு நிலவை வைத்துக் கொண்டே நம் கவிஞர்களை கட்டுப்படுத்துவது கடினம். நல்ல வேளை இரண்டாம் நிலவு இப்போது இல்லை.
http://news.nationalgeographic.com/news/2011/08/110803-earth-two-moons-collision-space-science/
[/stextbox]
[stextbox id=”info” caption=”அழிக்க முடியாத குக்கீ(cookie)”]
http://www.wired.com/epicenter/2011/07/undeletable-cookie/
[/stextbox]
[stextbox id=”info” caption=”அயன் ராண்ட்”]
தத்துவஞானிகளால் சமூகத்துக்கு விளையும் பயன் என்னவாக இருக்கும்? சமூகத்தின் போக்குகளை கூர்மையாக அவதனித்து அதன் துயரங்களின் மைய காரணியை கண்டுபிடித்து அதற்கான தீர்வையும், விழுமியங்களையும் அளிப்பதே. அவர்களின் தத்துவங்கள் சமூகத்தின் அனைத்துவித மக்களையும் ஒருங்கிணைப்பதாக இல்லாமல், “தனித்துவம்”, “சுயம்” என்ற வகையில் இருந்தால் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் பெரும் அழிவை கொண்டுவரும். அயன் ராண்ட் குறித்து சில விவாதங்கள் சமீபகாலமாக தமிழ் சூழலில் எழுந்தன. அந்த விவாதத்தை தொடர்ந்து இந்தக் கட்டுரையை காண முடியும்.
http://www.salon.com/life/feature/2011/04/04/my_father_the_objectivist
[/stextbox]
[stextbox id=”info” caption=”ஜெர்மனியும் குழந்தைப் பிறப்பும்”]
http://www.spiegel.de/international/germany/0,1518,778351,00.html
[/stextbox]
