Site icon சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

பருவத் தொடக்கம்

சூழ்ந்தவையெல்லாம்
தெளிவின்றி தெரியும்

வேறந்த ஓசையும்
செவியுள் புகாது

காண்பதெல்லாமே
அழகோவியமாய் தோன்றும்

உள்ளும் புறமும்
மென்குளுமை படரும்

வானெங்கும் மின்னொளி விட்டுவிட்டுச் சுடரும்

காத்திருப்பு வீணல்லவென்ற
எக்களிப்பு பொங்கும்

வருவதற்கான
அறிகுறிகளெல்லாம் அமைகிறது இனியதாகவே
பொழிந்தபின்தான்
தெளியும் …
வாழவைக்கிறதா அன்றி
அழித்துக் கடக்கிறதா என

காதலுக்கும் மழைக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
பருவம் தொடங்குவதில்

Exit mobile version