Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

வாசகர் மறுவினை

509
திரு. ச.திருமலைராஜன் சென்ற இதழில், புத்தக அறிமுகம் பகுதியில் – வாழ்வு தரும் மரங்கள் – ஆர்.எஸ்.நாராயணன் கட்டுரையை படித்தவுடன் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. மிக அருமையாக எழுத்து நடை. அவர்க்கு என் வாழ்த்துக்கள். இதுபோல் தொடர்ந்து நிறைய பயனுள்ள தகவல்களைத்தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
இரா. கண்ணன்

ராமன் ராஜா ‘அப்பா, அம்மா,அம்மம்மா’ விஞ்ஞான கட்டுரையை மிக அழகாக எழுதியிருக்கிறார்.
நிறைய எழுத வாழ்த்துக்கள்.
வாழ்க சுஜாதா.
க்ருஷ்

வலி மிகுந்த பழமையின் ஞாபகங்கள்..மாறிக்கொண்டே இருக்கும் மாறுதலின் நெருடல்களில் சிக்கிக்கொள்ளாமல், இருந்ததின்,வாழ்ந்ததின்,சுவைத்ததின், மகிழ்ந்ததின் பதிவை இன்னமும் பதியவைத்திருந்தால்..ரசனையின் சுவை மிகுந்திருக்கும்.
குமிழும்,நாதங்கியும் பூட்டப்பட்ட கதவினுடனான சந்தோஷமும் , கடனுக்காகச் சிறை பிடிக்கப்பட்ட கதவின் மீதான,தொலைந்து போன சந்தோஷத்துடன் கூடிய
ஏக்கமும் நிறைந்ததுதானே வாழ்க்கை….!
பெருமாள் மகன்

சி. சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு- பகுதி 8 இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டிகள் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள். தொடரட்டும் அதே போன்று புதிய கண்டுபிடிப்பாளர்களை திறமையான இளைஞர்களை அறிமுகம் செய்து அவர்களையும் ஊக்கப் படுத்துங்கள்
இந்தியன் குரல்
பாலசுப்ரமணியன்

Exit mobile version