முருகன் லேப்டாப்பை இறுக்கமாகப் பிடித்தான். அந்தப் பெயரை மறுபடியும் மறுபடியும் படித்தான். அவன் யார், எங்கே இருக்கிறான், எப்படி இருக்கிறான், தனக்குத் தெரிந்தவனா என்று அவன் மனம் அலைபாயத் தொடங்கியது. கல்யாணி குளியலறையில் முணுமுணுத்துக்கொண்டிருந்த பாடல் அவனைக் கோபப்படுத்தியது. முகம் இல்லாத ஒரு பெயருக்கு எதிராக என்ன செய்ய முடியும், செய்தும் என்ன ஆகப்போகிறது என்று தன் கையாலாகாத்தனத்திற்கு அவன் மனம் சப்பைக்கட்டு கட்டியது. குளியலறைக் கதவு திறந்த சத்தம் கேட்டதும் அவன் லேப்டாப்பை மூடினான்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed