ருஷ்யன் சர்க்கஸ்

பிப்லப் முகர்ஜியை நான் முதல் முறையாகச் சந்தித்தது ஒரு ஞாயிறு நண்பகலில் எங்கள் ஊர் கோயிலில். என்னைப்போன்ற மாணவர்கள், மற்றும் கல்யாணமாகாத தனியர்கள் வாரக்கடைசியில் கோயிலுக்கு வருவதற்கு ஸ்ரீகணபதியின் தரிசனத்தை தவிர வேறு சில காரணங்களும் உண்டு. அவற்றுள் முக்கியமானது கோயில் கேண்டீனில் கிடைக்கும் தென்னிந்திய சாப்பாடு.

காமசூத்திர ஓய்விடம்

நான் சொல்லப்போவது ஒரு உண்மைச் சம்பவம். வகுப்பு முடிந்து பல்கலையிலிருந்து அறைக்கு திரும்பிய ஒரு கோடை காலத்தின் மாலை ஒன்றில் என் அறையின் கதவின் முன் உறையுடன் கூடிய ஒரு இசை குறுவட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை முன்வைத்துத்தான் இந்த கட்டுரை. இதைப்பற்றி இவ்வளவு நீளமான கட்டுரை எழுதுவேன் என்றும் அப்போது நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.