மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்

This entry is part 62 of 72 in the series நூறு நூல்கள்

ஷெர்லாக் ஹோம்ஸின் தீவிர வாசிப்பின் பின்னணியில் சில குற்றப் புனைவுகளையும் சமைக்கத் தவறுவதில்லை காலத்துகள்.  ஆனால் அதற்கான களம், பின்புலம் என்றெல்லாம் மெனக்கெடாமல், ஒருவித அங்கத நடையில் எழுதி திருப்தியடைந்து கொள்கிறார்.  இடையே, இலக்கிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் எழுத்தாளனும் இடம்பெறத் தவறுவதில்லை. ஃபோர்ஹேவின் (Jorge Louis Borges)  பாதிப்பில், தன் குறுநாவலில் எழுதும் கனவின் பாதிப்பில், அதிலிருந்து வெளிப்பட்டு ஒரு சிறுகதையை எழுதிவிட்டுப் போகிறார்

தந்தைக்கு என்றும் நன்றியுடன்

கிட்டப்பா, அச்சிந்திலு காதல் அனுபவங்கள். வீட்டுப் பெரியவர்களின், மாலை நேர திண்ணைப் பேச்சின் சுவாரசியத்துடன், கிராமிய மக்கள் வழக்கில், துள்ளிப்பாயும் நடையில் கோபல்ல கிராமம் நமக்கு அறிமுகமாகியது. கிட்டப்பன் அச்சிந்திலு தவிர, கோவிந்தப்ப நாயக்கர், காரவீட்டு லச்சுமண நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராசப்ப நாயக்கர் என புலம்பெயர்ந்த கம்மாள நாயக்கர்களைப் பற்றிய அழுத்தமான சித்திரத்தை கூட்டிக் காண்பித்தது கோபல்லபுர கிராமம். இன்னமும் பல பத்தாண்டுகள் நின்று பேசப்படும் ஓர் இலக்கிய படைப்பாக, பலரின் வாசிப்பின் வழியே அச்சிறு கிராமம் பரந்து விரிந்த பெருநிலமாக உருவாகியிருக்கிறது. சிறிய பாதத்தைக் கொண்டு உலகை அளந்த திரிவிக்கிரமன் போல, கிரா-வால் இந்த ரசவாதத்தை நிகழ்த்தி காட்ட முடிந்திருக்கிறது.

கவிதைகள்

வாள் கொண்டு அறுக்கும் போதும்
எரி கொண்டு தசையை தீய்க்கும்போதும்
வலி காட்டாது தாங்கியதால்
சற்றே சலுகையுடன்
புன்னகை கூட காட்டுகின்றன.

சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்

ஆனந்தவிகடன் கதைகள் உறவுகளில் உள்ள ஏய்ப்புகள் பற்றியும், உடலை மையப் படுத்திய உறவுகளில் உள்ள ஏமாற்றங்கள், சோகங்கள் பற்றியுமான கதைகள். வாழ்க்கையைப் பற்றி மெத்தவும் அறிந்த ஒரு பெண் எழுதுவது போன்ற கதைகள். ஆனால் இளம் வயதில் வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்து விட்டதுபோல் நினைப்பதும் ஒரு வித முதிர்ச்சியற்ற குழந்தைத்தனம்தான்.
இந்தக் கதைகள் பிரபலமான பத்திரிகைகளின் நடையை ஒட்டியே இருந்தன. கருத்துகள் சிறிதே மாறுபட்டிருக்கலாம். ஆனால் நான் வளரும்போது இருந்த இலக்கியத்திலும் சினிமாவிலும் படித்த, நாகரீகமான பெண், படித்த ஆனால் பழமை விரும்பியான, பண்பாட்டைக் காப்பாற்றும் பெண்ணுக்கு எதிர்மறையாகவே பார்க்கப்பட்டாள். அந்த வகையில் என் கதையின் பெண்கள் தங்கள் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும், குரல் இழக்காதவர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்குள் பெண்களை ஒடுக்கும் பல விஷயங்களுக்கான ஆதரவு இருந்தது.

அமைதியின் அசாதாரணக் கூர்மை

அசோகமித்ரன் ஆங்கில மொழியுலகில் ஓரளவுக்கு நேரடியாக இயங்கிவந்தபோதும் அவருடைய உச்சம் தமிழில்தான் நிகழ்ந்திருக்கிறது. மந்தமான, நோய்க்கூறு மனநிலை வாய்த்த பிராந்திய அரசியல் சூழலிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருடைய படைப்புலகத்திற்கு புதிய வாசல்களை நிர்மாணித்த புண்ணியம் அவருடைய மொழிபெயர்ப்பாளர்களான லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம், கல்யாணராமன் மற்றும் கோமதி நாராயணன் போன்றோரைச் சேரும். இத்தனைக்கும் மொழிமாற்ற பிரசுரங்களில் கடைநிலையில் வைத்து கௌரவிக்கப்படும் ஆன்மாக்கள் மொழிபெயர்ப்பாளர்கள்தான்.

கல்யாணராமனுடன் ஒரு காஃபி

அம்பையின் ஓரிரு சிறுகதைகளையும் இந்த காலகட்டத்தில் மொழிபெயர்த்தேன். சுந்தர ராமசாமியின் ‘எங்கள் டீச்சர்’ கதையையும் ஒரு போட்டிக்காக மொழிபெயர்த்தேன். ஆறுதல் பரிசுதான் கிடைத்தது.

இந்த கட்டத்தில் பல விஷயங்கள் எனக்குத் தெளிவாகியது. மொழிபெயர்ப்பு, படைப்பெழுத்துக்கு ஈடான நிறைவைக் கொடுக்ககூடியது.மொழிபெயர்ப்பு தரமானதாயிருந்தால் தேர்ந்த வாசகர்கள் அதை நாடி வருவர். ஒரு சிறந்த படைப்பின் வாசகத் தளத்தை மொழிபெயர்ப்பின் மூலம் விரிவாக்குவது முக்கியமான சமூகப் பங்களிப்பு.எதற்கும் மேலாக மொழிபெயர்ப்பு எனக்கு ஊக்கமும் உவகையும் தரும் செயல்பாடாக இருந்தது.நான் அதைத் தொடர்ந்து செய்துவருவதற்கு இவையே இன்றும் உந்துதலாக விளங்குகின்றன.

மீனாட்சி கொலு

சொல்லப் போனால் தர்மு மாமியே அந்தத் தெருவுக்கு அந்நியம்தான். ஹரிஹரசுதன் வீட்டு மாடியில் நடக்கும் தையல் பள்ளியில் ஆசிரியை. பொத்தி வைத்தாற்ப் போல், அவர் தெருவில் போவதும் வருவதும் தெரியவே தெரியாது. நவராத்திரி சமயத்தில் மட்டும் விதிவிலக்காக வைத்தி தாத்தா வீட்டுக் கொலுவில் அதிகம் தெரிவார். கௌரிக்கு பூ தைக்கிறேன், விச்சுவிற்கு கிருஷ்ணர் வேஷம் போடுகிறேன் என்று ஏதோ ஒரு சாக்கு. அந்த பத்து நாட்களும் வைத்தி தாத்தா வீட்டில் ‘மாமி, மாமியென’ எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் தர்முதான்.

முயல் காதுகள்

போஸ்ட் ஆபீஸ்க்யூவில் நிற்கும்போது, குடிதண்ணீர் வெண்டிங் இயந்திரத்தில் சில்லறை போட்டு போராடிக் கொண்டிருக்கும்போது,கைக்கொரு பையாக க்ரோசரி சமாச்சாரங்களை அள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி மாடிப்படிகள் ஏறும்போது, என்று எல்லாஇடங்களிலும் ‘டபக்’கென உட்கார்ந்து அவிழ்ந்திருக்கும் ஷூ லேஸ்களை முடிபோட ஆரம்பித்துவிடுவார். ‘பன்னி இயர்,பன்னி இயர்….’.கூடவே நானும் செஸ் விளையாட்டில் ‘செக்’ வைக்கப்பட்ட ராஜாவைப் போல அத்தனை வேலைகளையும் அந்தரத்தில் விட்டுவிட்டு..