கம்பீரமும், தீர்க்கதரிசனமும்; அ.முத்துலிங்கம் எனும் கதையாளன்

முத்துலிங்கம் ஈழத்து அரசியல் பற்றியும் தமிழர்கள் பற்றியும் காத்திரமான எடுத்துக்கூறலைச் செய்யவில்லை என இலக்கியவாதிகள் சிலர் கூறுவதைக் காணமுடிகிறது. வெளிப்டையாகக் கூறுவதில் இருந்து ஒதுங்கிவிட்டு சில இடங்களில் மறைமுகமாகக் கூறியுமுள்ளார். (அதன் வலி எனக்குத் தெரியும் அதனை காசாக்க என்க்கு விருப்பமல்ல” என்று பாலுமகேந்திரா ஒருமுறை சொல்லியுள்ளதை இங்கு ஞாபகமூட்டலாம்.) இச்சிறுகதையில் அதற்கான ஓரிடம் இருப்பதாகக் கருதுகிறேன்.