யாருமற்ற சாலையில்

சற்றுத் தொலைவில்
பறவை ஒன்று நடந்தபடியே
சாலையைக் கடந்தது
அது பூமியில் தன் மெல்லிய
கால்தடம் பதித்து நடந்ததை
அந்த பச்சை பிரபஞ்சம்
பார்த்துக் கொண்டிருந்தது.