மாரி மைனி

‘யய்யா மதியா?ன்னு அதே கேள்விய திருப்பி கேட்டுச்சு. ‘ஆமா நான் மதிதான் பேசுதேன், நீங்க யாரு?’ன்னு கேட்டேன். ‘நான்தான்ய்யா மைனி பேசுதேன், சாந்தி மைனி.. மறந்திட்டியா?’ன்னு அந்த கொரல கேட்டதும் தண்ணிக்குள்ள குதிச்சதும் வருமில்லையா அப்படியொரு அமைதி எனக்குள்ள வந்துச்சு. காது ரெண்டையும் பொத்திக்கிட்டா எப்படியிருக்கும் அப்படி இருந்துச்சு ‘ எப்படி இருக்கீங்க மைனி’ உங்கள் எப்படி மைனி நான் மறப்பேன்’ன்னு சொன்னேன். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ’நல்லா இருக்கேன் மதி.. அத்த எப்படி இருக்கு.. பாஸ்கர் எப்படி இருக்கான், செல்விக்கு எத்தனை பிள்ளையளு?’ என்று மைனியின் கொரல் என் காதெல்லாம் நிரம்பிப்போச்சு. ‘எல்லாரும் நல்லா இருக்காங்க மைனி?, நீங்க குமாரண்ணன், பிள்ளையளு எல்லாம் எப்படி இருக்கிய?ன்னு நான் கேட்டாளும் எனக்கு மைனியத் தாண்டி யாரப் பத்தியும் விசாரிக்கனுமுன்னு தோணலை.

ஆடுகளத்தில் சிதையும் பண்பாடு

இடைவேளை வரை உற்சாகமாகப் பயணிக்கும் படம் இடைவேளைக்குப்பின் படுத்துவிடுகிறது. இடைவேளைப் பகுதியிலேயே இனி என்ன நடக்கும் என்று யூகிக்க அல்ல நிச்சயமாகவே சொல்லிவிடமுடிகிறது. முழுப்படத்திற்கும் காசு கொடுத்துவிட்ட காரணத்தால் அரைப்படத்தில் எழுந்து போகாமல் இருக்க நேரிடுகிறது.

ஆதலினால் காமம் செய்வீர்

மனோரி கரையில் இறங்கியவர்களை மீன்காரர்கள், ஆளுக்கொரு மீனை கையில் வைத்துக்கொண்டு விலைசொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிலும் கவனம் செலுத்தாமல் இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். தூரத்தில் அவர்களுக்காகவே அவதரித்து காத்திருந்தது போல் ஒரு பாறை இருந்தது. மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. இருவரும் வாகாய் பாறைமேல் உட்கார்ந்தார்கள். கடல் காற்று அவர்களை வருடிக் கொண்டிருந்தது.

விடுப்பு

அவளது மாமியார் ஏற்கனவே தனது கூச்சலால் அண்டைவீட்டார் பலரை கூட்டியிருந்தாள். ராதா அசையாமல் இருந்தாள். அவள் தண்ணீரை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள்.
புன்தி, பொஜுரி, காலிஷா, கஜோலி ஆகிய வகை மீன்குட்டிக் கூட்டமொன்று அவளது பாதங்களை மொய்த்தன. ‘ஓ, தயவு செய்து தூரப் போங்கள், இன்று நான் உங்கள் யாருக்கும் உணவு கொண்டு வரவில்லை.’ ஆனாலும் அவளின் பாதத்தை சுற்றி மகிழ்ச்சியாய் அவை பல்டியடித்துக் கொண்டிருந்தன. தங்களுக்கு அருகில் ராதா இருப்பது அவைகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவைகள் அதைவிட வேறெதுவும் கேட்கவில்லை.

பஞ்சம்

அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தோட்டத்தை சுற்றிப் போடப் பட்டிருக்கும் மூங்கில் வேலி தங்கம் போல் பிரகாசிக்கும். இந்த வேலிக்கு ஐம்பது கஜம் தொலைவில் ரயில் போகும். இந்த முறை கூட நந்தினியின் நீண்ட தலைமுடி அவள் பின்னால் காற்றாடி போல் படர்ந்திருந்தது. இரவில் படுக்கையில் அவள் கட்டிக் கொள்ளும் பழைய சேலை சுருக்கங்கள் ஏதுமற்ற அவளது உடலில் ஒழுங்கற்று சுற்றப் பட்டிருந்தது. அந்த ரயில் கடக்கும் போது அவளைக் காணாத ஜோடிக் கண்களே இருக்காது எனலாம்.