நிழலாடும் நினைவுகள்

‘Hyperthymesia ஒரு அரிய வகை நோய். இது வரைக்கும் உலகத்துல 25 பேருக்கு மட்டும் தான் இந்த நோய் இருக்குறது உறுதி செய்ய பட்டிருக்கு. அனந்தன் 26ஆவது பேஷண்ட்.’
‘இதனால உயிருக்கு ஒண்ணும் பாதிப்பு இல்லையே?’ மகாவின் கைகள் நடுங்கின.
‘நோ நோ. மகா நீங்க பயப்பட தேவ இல்ல. Hyperthymesia வந்தவங்களுக்கு அவங்களோட கடந்த கால நிகழ்வுகள் ஒண்ணு விடாம நினைவுக்கு வரும். அவங்க குறிப்பிட்ட தேதியில என்ன பண்ணிட்டிருந்தாங்க, என்ன கலர் டிரஸ் போட்டுருந்தாங்க, யார் யார் கூட இருந்தாங்க இப்டி எல்லா விஷயமும் துல்லியமா ஞாபகத்துக்கு வரும்.’
‘இத குண படுத்த முடியாதா நிர்மலா?’
‘இத்துக்கான ட்ரீட்மெண்ட் இப்போ தான் டெவலப்மெண்ட் ஸ்டேஜ்ல இருக்கு. அடிப்படையா சென்சிடிவ் ஆகாம பாத்துக்குட்டாலே போதும்.’
‘ஞாபகங்கள் நல்லது தானே டாக்டர்?’ கொஞ்சம் நிம்மதியுற்றவலாய் மகா கேட்டாள்.
‘அது மன அழுத்தத்த குடுக்காத வரைக்கும் நல்லது தான்.’
மகா அனந்தனை நோக்கினாள். நிர்மலா அறைக்கு வெளியில் இருந்த சிறிய தோட்டம் போன்ற அமைப்பினை ரசித்து கொண்டிருந்தான் அனந்தன். அங்கு பூத்திருந்த பூக்களும் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியும் அனந்தனுக்கு இயற்கை தோற்றத்தை அளித்தது. அவன் உதடுகள் மகிழ்ச்சியில் சிரித்து கொண்டிருந்தன.