கேட்டதும் கண்டதும்

அந்த வீட்டுக்குப் பெரியவா வந்தா. அப்போ வீட்டுக்காரரோட பரிச்சயம். பெரிய காம்பவுண்டு  உள்ளே நாலஞ்சு வீடுகள்.  ஒரு ரூம், சின்ன கிச்சன், அதை விடச்  சின்ன பாத்ரூம்ன்னு வீடு. வாடகைன்னு நானா கொடுக்கறதுதான். கொடுக்காட்டாலும் கேக்க மாட்டார். அப்படி ஒரு மனுஷன். “வாடகையை விட்டா ஒத்தக்கட்டைக்கு வேறே என்ன பெரிய செலவு?  சாப்பாடுதான்.  மாசா மாசம் பென்ஷன் வரது. இங்கே மாசத்திலே பதினஞ்சு நாள் தக்ஷணையோட சாப்பாடும் கிடைச்சுடும். பாத்தேளா, தக்ஷனைன்னதும்தான் ஞாபகம் வரது. ஐநூறு ரூபாயை வாத்தியாருக்கு வாபஸ் கொடுக்கணும்” என்றபடி கையிலிருந்த பர்ஸைத் திறந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்தார்.

பெரிய ஸார்

ஹைமவதி கையில் கொண்டு வந்திருந்த பச்சை நிற அப்ளிகேஷன் ஃபார்மையும் மார்க் ஷீட்டையும் எடுத்து அவரிடம் தந்தாள். அவர் தான் அணிந்திருந்த கண்ணாடியை லேசாக மேலே தூக்கி விட்டுக் கொண்டு பார்த்தபடியே மேஜை மேலிருந்த காலிங் பெல்லை அடித்தார். உட்பக்கத் தள்ளு கதவைத் திறந்தபடி பள்ளி அலுவலர்கள் அணியும் சீருடையில் ஒருவர் வந்தார்

மூட்டம் 

அவன் தயங்கினான். பிறகு குரலைச் செருமிக் கொண்டு ” நிஜமாவே எனக்கு இப்ப பேசப் பிடிக்கலே. நீ கிளம்பறேன்னு சொல்ல நான் உள்ள போனேன்லே. அப்ப சித்தி என்கிட்டே வயசுப் பிள்ளே நம்ம வீட்டுலே இருக்கு. அதை நீ ஞாபகம் வச்சுக்க. இந்தத் தனம் பிள்ளே விபரந் தெரியாம கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு வாயாடிகிட்டு இருக்கு. அவனும் வயசுப் பிள்ளதானே.  தனத்தை அவன் அடிக்கடி பாத்துகிட்டே இருந்ததை நானும் பாத்தேன். பொண்ண வச்சுக்கிட்டு நாமதான ஜாக்கிரதையா இருக்கணும்னாங்க.”

அதனால்தானா?  

“கோர்ட்டுக்குப் போய் அலையட்டும் கம்மனாட்டி. வக்கீல் பீஸ் அழட்டும். ராஸ்கல். நன்றி கெட்ட நாய்” என்று அப்பா பழி வாங்கிக் கொண்டிருந்தார். இந்த நாள்களில் ஆதி தன்னை வந்து பார்த்து  அனுதாபமாக நாலு வார்த்தை சொல்லவில்லை என்பது அவருக்குப் பெரிய விஷயமாகப் போய்விட்டது. என்னாலும் கூட ஆதியின் மௌனத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் நானாக எதற்கு அவனிடம் அப்பாவை வந்து பார் என்று சொல்லவேண்டும் என்று என் மனதிலும் குமுறல் இருந்தது.

தேர்வு

இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சா?” என்று திடுக்கிட்டாள் பத்மா.
“ஆமா. சந்தையிலே மாடு பிடிக்கற மாதிரியெல்லாம் வந்து என்னை யாரும் பாக்கக் கூடாது. ஐ கான்’ட்  லீவ் ரெஸ்ட் ஆஃப் மை லைஃப் வித் எ ஸ்ட்ரேஞ்சர். நான் ஆளைப் பாத்துப் பேசிப் பழகினத்துக்கு அப்புறம்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” 
“சரி, சரி. இப்ப எதுக்கு வீணான பேச்செல்லாம். கல்யாணம், கார்த்தி எல்லாம் வேளை வந்தா யார் தடுத்தாலும் நிக்காது” என்று சூரி கோபத்துடன் இருவரையும் பார்த்தார்.

பாற்கடல் 

கோத்தாஸ் காப்பியைத் தவிர ரகு வேறு எதையும் தொட மாட்டான். ‘காலங்காத்தால அதிலே கிடைக்கிற கிக் மாக்டவெல் விஸ்கி கூடக் கொடுக்காது’ என்பான். அந்த விஸ்கியும் ஒரு சிநேகிதனின் பிறந்த நாள் பார்ட்டியில் அல்லது ஆபீசில் யாராவது ரிட்டையராகிப் போனால் நடக்கும் பிரிவு உபசார விருந்தில் கிடைப்பதுதான். என்னமோ தினம் தினம் மாலையில் கைக்காசு செலவழித்து குடித்து வருபவனைப் போலப் பேசுவான். இந்தப் பேச்சு மட்டும் இல்லா விட்டால் உன்னை ஒருத்தன் கூட மதிக்க மாட்டான் என்று அவள் நினைத்துக் கொள்வாள்

ஆயுதம்

தேவு காலேஜை முடித்து விட்டு ஆறு மாசம் வேலை கிடைக்காது தடுமாறிக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் காமேச்வரனிடம் வந்து “அண்ணா, நான் உங்க பாக்டரிலே வேலைக்குச் சேந்துக்கறேன்” என்றான்.

காமேச்வரன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். பேண்ட் ஷர்ட் என்று காலேஜ் பையனின் உடை. பளீரென்று திருத்தமாக இருந்தான்.

“விளையாடறயாடா தேவு?” என்று சிரித்தான் காமேச்வரன். “பாஸ் மாதிரி டிரஸ் பண்ணிண்டு எனக்கு முன்னாலே நிக்கறே? என்னைப் பார்” என்று தலையிலிருந்து கால்வரை ஒரு கோட்டை இழுப்பது போல ஒரு கையை உயர்த்தித் தாழ்த்தினான்.

“அவ்வளவுதானே?” என்றபடி தேவு தனது கால்சட்டையையும் அரைக்கைச் சட்டையையும் கழற்றினான். இப்போது அவனும் அரை நிஜார் பனியனில்.

இருள் 

அழகை ஆராதிப்பவனில்லை என்று சொல்லிக் கொண்டு வருபவனும் அவனது பெற்றோரும் வீடு வாசல் தாவர சொத்துக்களை மதிப்பிடும் அலுவலர்களாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஜாதகத்தில் கொஞ்ச தோஷம் என்று கழிக்கப்பட்டாள். எரிச்சலுற்ற அவள் வருகிற வரன்களைக் கழித்துக் கட்ட ஆரம்பித்தாள்.காலம் அவளிடம் ஏற்படுத்திய வடுக்களின் வலி அவ்வப்போது வாய் வழியே வந்து சீறும்.

அபியும் அம்மாவும்

அப்பா என்னிடம் “அபி, உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு. அவனுக்கும் உன்னை. ஆனால் நீ மத்த விஷயங்களைப் பத்தி யோசிச்சியா?

“மத்த விஷயங்கள்னா? ஜாதியைப் பத்தியா?

அப்பா என்னைப் பாத்து “அவ்வளவு முட்டாளாகவா நான் உனக்குத் தெரிகிறேன்?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவர் குரலின் அமைதியும் ஆழமும் என்னை ஒரு வினாடி தாக்கி விட்டது.

நடிகன்

அந்தக் கிளப்பில் விளையாடும் ஒரே விளையாட்டு சீட்டாட்டம்தான். அலுவலக நாள்களில் மட்டுமே மாலையில் நடக்கும் கிளப்பில் …. பல்வேறு விற்பனை வரிக் கிளை அலுவகங்களில் வேலை பார்த்தவர்கள்தாம் விளையாட அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் இடது கையிலும், மேஜைக்கு அடியிலுமாக வருவதை வீட்டுக்கு கொண்டு செல்லும் விருப்பம் இல்லாதவர்களாக அலுவலக வளாகத்துக்குள்ளேயே அதைத் தொலைத்து விட வேண்டும் என்று கிளப்புக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

நோவு

“வாளப் பளம்தான். உனக்குத்தான். சாப்பிடு” என்றார் அதனிடம்.
நாய் தோலியுடன் பழத்தைக் கடித்துச் சாப்பிட்டது. அவரைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டது.

அன்னை

அக்கா இரண்டாவது அடையைக் கொண்டுவந்து அவன் தட்டில் போட்டபோது நம்பீசன் அவளிடம் “இன்னொன்னும் போட்டுடுங்கோ. இன்னிக்கி ராத்திரி ஆத்திலே வெறும் மோர் குடிச்சாப் போறும்” என்றான்.