மல்லிகா ஹோம்ஸ்

சென்னை மாதிரியான நகரங்களிலிருந்து வருகிற என்னைப் போன்ற நகரவாசிகளுக்கு, கொஞ்சம் தனிமைப்படுத்தப்பட்டதாகத் தோன்றியது. கோயம்புத்தூருக்கு வெளியே, தம்பூர் சாலையும், தேசிய நெடுஞ்சாலை 181ம், சந்திக்குமிடத்தில், மல்லிகா ஹோம்ஸ் அமைந்துள்ளது. நடுவாந்தரமான நகரத்தை விட்டகன்று, அதன் புறநகர் பகுதிகளுக்குச் சென்றதில், மல்லிகா ஹோம்ஸை உருவாக்கியவர்களுக்கு அதிக இடம் கிடைத்த காரணத்தினால், நாங்கள் பெரிதும் பாராட்டுகிற பல வசதிகளில் அவர்களால் முதலீடு செய்ய முடிந்தது

இயற்கைப் பரிமாற்றம்

அவளுடைய பிரத்தியேகமான படுக்கையறை கதவுக் குமிழில் தொங்கிக்கொண்டிருந்த தோள் பையில், அவள் அன்றைய காலை வேட்டையில் கண்டெடுத்த பொருட்களை வைத்தாள். தோள் பையில் அவளது மகன் நீல் கண்டெடுத்த பொருட்களின் கணிசமான ஒரு பகுதியும் இருந்தன. மற்றவை அவளுடைய பெட்டிகளில் இருந்தன. அவளும் மிஷலும் பிரிவதற்கு முன்பு, அந்தப் பை அவர்களுடைய படுக்கை அறையின் கதவுக்குமிழில் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் கனத்தில், ஒருநாள், கதவுக்குமிழ் உடைந்து கையோடு வந்துவிடப் போகிறது என்று மிஷல் அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பான. ஆனால் அப்பையை அங்கிருந்து அகற்றும்படி அவளிடம் ஒருபோதும் சொன்னதில்லை.