வடசென்னை திரைப்படம் ரிலீஸாகி மூன்று வருடம் கழிந்த பின்பு அதனுடைய திரைக்கதையின் சாராம்சத்தை அறிந்துக்கொள்ள முனையும் கட்டுரை இது. வடசென்னை தன்னை இரண்டு விதமாக புனைந்துக்கொண்டுள்ளது. ஒன்று அந்நிலத்தின் கதையாக, இன்னொன்று சாபம் – புனைவின் விதியாக. அந்த நிலம் தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னுள்ளிருந்தே மனிதர்களை தெரிவு செய்து அனுப்புகிறது. நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுபவர்கள் அப்புறப்படுத்துபவர்கள் என்கின்ற இருநிலை மனிதர்களையும் …