2022

சொல்வனம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடமாவது தொற்று நோய்கள் முற்றிலுமாக அகன்று இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். இயற்கையின் சீற்றங்களும் தணிந்து உலகெங்கும் மனிதர் நன்னிலைக்குத் திரும்பினால் அது உபரி நன்மை.  *** ஓரிரு தினங்கள் முன்பு எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு சாஹித்ய அகதமியின் “2022”

கற்றலொன்று பொய்க்கிலாய்

இளைய பாரதத்தை வரவேற்றுப் பாரதி ‘கற்றலொன்று பொய்க்கிலாய்’ எனப் பாடுகிறார். புகழ்பெற்ற, இந்தியாவிலுள்ள அல்லது வெளிநாட்டில் பணி செய்யும் இந்திய அறிவியலாளர்கள், மனித வள மேம்பாட்டுத்துறை வல்லுனர்கள் போன்றவர்களை இன்ஃபோசிஸ் கௌரவித்திருக்கிறது. டிசம்பர் 2, 2020 அன்று  நிகழ்நிலை நிகழ்வின்மூலம் அறுவருக்கும் தங்கப்பதக்கம், விருது மற்றும் பணமுடிப்பு $100,000  “கற்றலொன்று பொய்க்கிலாய்”

விருதேற்பு உரை

எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும், உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது.