பிராணிகளின் வகுப்பு என்ற எகானமி கிளாஸ் தான் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. இலவசமாக வந்தால் எக்சிக்யூட்டிவ் கிளாஸ் அதே செலவுக்கு கிடைத்தால் சர்க்காருக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. இப்போதோ சங்கரன் கேட்காமலேயே மேலேற்றப் பட்டிருக்கிறார்.அவர் உயிர் இருந்தாலும் போனாலும் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. முன்னாள் அரசுத்துறை காரியதரிசி, மற்றும் அரசு ஆலோசகர். இது போதாது அதிகபட்ச பாதுகாப்பு தர.