வான்மதி செந்தில்வாணன் – கவிதைகள்

வீட்டிற்குப் போனதும் முதல்வேளையாக
கதவடைத்துக்கொண்டு
சத்தமாகச் சிரிக்கவேண்டுமென எண்ணமிட்டவாறே
பேருந்து விட்டிறங்கினேன்.
எதையும் தாங்கவியலாத
இம் மூத்திர வாழ்வுபோல் ,
வீடடையும் முன்பே அடக்கமாட்டாமல்
அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு
பலமாகக் கனைத்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கவிதைகள்- லாவண்யா, வான்மதி செந்தில்வாணன்

கையெழுத்து மறையும் நேரம்
கருவேலமுள் மண்டிக்கிடக்கும்
காட்டுப்பாதையில் நடந்துபோகையில்
கால்செருப்பு கைச்செருப்பானால்
ஒருவன் மனதில் என்ன தோன்றும்?