வாக்குமூலம் – அத்தியாயம் 11

அவ நேத்து வந்திருந்தா. யாரோ கோடாடுன்னு ஒரு டைரக்டர் செத்துப் போயிட்டாருன்னு ரொம்ப வருத்தப்பட்டுப் பேசிக்கிட்டு இருந்தா. நம்ம நாட்டு டைரக்டர் செத்துப் போயிட்ட மாதிரி ரொம்ப ஆத்தாமைப் பட்டா. இவுஹ அப்பாவுக்கும் அவரு செத்துப் போனது சங்கடமாத்தான் இருக்குது போல. அவரோட படங்களப் பத்தி ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நாளைக்கி முன்னாலே ஶ்ரீதர் செத்துப் போனதையும், பாலச்சந்தர் செத்துப் போனதையும் பத்தி நெனச்சுக் கிட்டேன். ஒலகத்துல பொறந்துட்டா சாவுன்னு ஒண்ணு வரத்தானே செய்யும்? எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் செத்துத்தானே போறாங்க? சாவு கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா?

கம்பா நதி – ஒரு வாசக அனுபவம்

கடைசி வரை சங்கரன் பிள்ளை மீது கோபம் வரவில்லை, ஆற்றாமை தான் வருகிறது. அதில் கூட யாரையும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ திரு வண்ணநிலவன் கூறுவதில்லை. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்ற தோணியிலேயே நகர்த்திச் செல்கிறார். வாழ்க்கையை கருப்பு வெள்ளை தவிர்த்து இடையில் பார்க்கக் கற்றுத் தந்தது இந்நாவல்.

எம்.எல்- இறுதி அத்தியாயங்கள் – 22-23

ஜீப் அவனை ஏற்றிக் கொண்டு ஊரை விட்டு எங்கோ வெளியே சென்றது. ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு ஒரு கட்டிடத்தின் முன்னால் போய் நின்றது. பொழுது மங்கலாக விடிந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார்கள். ஒரே ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எந்த ஊர், எந்த இடம் என்று நிதானிக்க முயன்றான்.  “போயி அவனுகளோட உக்காரு…” என்று கையை நீட்டிச் சொன்னார்.  அவர் கையை நீட்டிய இடத்தில் நாலைந்து பேர் இருப்பது மங்கலாகத் தெரிந்தது.. “வா.. சோமு..” என்ற துரைப்பாண்டியின் குரல் கேட்டது. ஒரு வித ஆச்சரியத்துடன் அவர்கள் இருந்த பக்கம் போனான். ஸ்டடி சர்க்கிளுக்கு வருகிறவர்களெல்லாம் இருந்தனர். எல்லாருமே வெறும் ஜட்டி, அண்டர்வேருடன் இருந்தார்கள். “நீயும் உன் வேட்டிய அவுருடா..” என்றார் போலீஸ்காரர். சோமு அவமானத்தால் கூனிக் குறுகினான். வேட்டியை அவிழ்க்காமல் தயங்கினான். அவரே அவன் இடுப்பிலிருந்த வேட்டியை உருவினார். சோமுவுக்கு அழுகை வந்து விட்டது. முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டான். துரைப் பாண்டியும் இன்னும் இரண்டு பேரும் “சாரு மஜும்தார் வாழ்க… மாவோ வாழ்க…” என்று கத்தினார்கள். போலீஸ்காரர் அவர்களைக் காலால் உதைத்தார்.

அறிவிப்புகள்

சொல்வனம் இதழில் 2012 ஆம் ஆண்டு முதல் பல கட்டுரைகளும், சிறுகதைகளும் நரோபா எனும் புனைப்பெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் சொல்வனம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது. 

எம்.எல் – அத்தியாயம் 20-21

இந்த ஊருக்கு என்ன வயதிருக்கும்? எத்தனை நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்த ஊர். சங்க காலத்துக்கு முன்பே, இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ஊர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எத்தனையோ லட்சம் மக்கள் வாழ்ந்து விட்டுச் சென்ற ஊர். கோவலனும், கண்ணகியும் இந்தத் தெருக்களில் நடந்திருப்பார்களா? புரட்சி நடந்த ரஷ்யா மாதிரி, சீனா மாதிரி இந்தியாவும் ஆகி விட்டால், இந்த வீடுகள், கட்டடங்கள் எல்லாம் அரசின் சொத்துக்களாகி விடும். அப்பாவின் கடை, சீதா பவனம் கூட அரசுக்குச் சொந்தமாகி விடும்.