இந்த விசாலமான வங்காளத்தின் விவசாயிகளின் குடிசைகளில், அந்த அன்னையின் ஆற்றுப் படிக்கட்டிகளில், நெல் வயல்களில், ஆலமரத்தடி நிழல்களில், அவளுடைய நகரங்களின் மையத்தில், பத்மா ஆற்றின் மணல் கரைகலில், மேக்னா ஆற்றின் அலை உச்சிகளில்- நான் இந்த தேசத்துடைய, மேலும் அதன் மக்களுடைய ஒரு குறிப்பிட்ட வடிவைக் கண்டேன், அதை நான் ஆழமாக நேசித்தேன்… இந்தப் பேரன்பு தந்த ஊக்கம்தான் என்னை இந்தப் புத்தகத்தை எழுதச் செய்தது. .. எனக்கு இன்றைய வரலாறைப் போலவே, பண்டை வரலாறும் உண்மையாகவும், உயிருள்ளதாகவும் இருக்கிறது. அந்த உயிருள்ளதும், உண்மையானதுமான கடந்த காலத்தைத்தான், உயிரற்ற எலும்புக் கூட்டை அல்ல, நான் இந்தப் புத்தகத்தில் கைப்பற்ற முயன்றிருக்கிறேன்.”