பஞ்சத்தை எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த கிராமத்தினர், பட்டினி கிடந்து ஒருவர் செத்தும் போகக்கூடும் என்ற அதிர்ச்சியான உண்மையை நேருக்கு நேர் பார்க்கிறார்கள். அந்தச் சாவுதான் பின் நிகழப்போகவிருக்கும், பெருமழைக்கான, பிரளயத்துக்கான முதல் மின்னல் அறிகுறி.
Tag: வங்க இலக்கியம்
மின்னல் சங்கேதம் – 11
மோத்தியின் உடல் மாமரத்துக்குக் கீழே கிடந்தது. நிறைய பேர் வந்து பார்த்தார்கள். தொலைவிலிருந்து பார்த்துவிட்டு நடுங்கியபடி சென்றார்கள். எல்லோரும் ’கடவுள் அருளால நாம பிழைச்சிட்டோம்’ என்று நினைத்தார்கள். அவர்களிருக்கும் நிலைமையின் குரூரத்தைக் காண அவர்கள் கண்களைத் திறந்துவிடுவதற்காகவே மோத்தி உயிர் விட்டது போல ஆகிவிட்டது. அவளுடைய பிணம்தான் அபாயத்தின் முதல் அறிகுறி, நெருங்கிவிரும் இடியோசையின் முதல் முனகல்.
மின்னல் சங்கேதம் – 10
காந்தோமணி மிகவும் அன்பானவள். கங்காசரண் அதனை உடனேயே உணர்ந்து கொண்டான். எங்கிருந்தோ வெல்லமும், வீட்டில் உருவாக்கிய பசு நெய்யும் கொண்டு வந்தாள். கங்காசரண் நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று அவள் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டாள். ஆனால் அவனால் சோற்றை விழுங்க முடியவில்லை. படோல், ஹபுவைக் காட்டிலும், அனங்காதான் அவனை மிகவும் தொந்தரவு செய்தாள். அவள் சாப்பிட்டு எத்தனை நாளானதோ யாருக்கும் தெரியாது.
மின்னல் சங்கேதம் – 9
பட்டினியில் வாடும் பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். சிலருக்கு சமைத்த சோறு தேவைப்பட்டது, சிலருக்கு அரிசி. ஒரு மணங்கு அரிசியும் பத்தே நாட்களில் காலியாகிவிட்டது. அதையெல்லாம் விட – அனங்காவின் இரண்டு வளையல்கள் – அவளுடைய கடைசி நகைகள் – நிரந்தரமாக அவளை விட்டுப் பிரிந்தன.
மின்னல் சங்கேதம் – 8
கங்காசரண் அதிர்ச்சியில் உறைந்துபோனான். அவன் குடும்பத்துக்கு எப்படி சோறு போடுவான்? அவனுக்கு சொந்தமாக வயல் கிடையாது. சம்பளம் பண்ணிரண்டு ரூபாய். இருபத்து நான்கு ரூபாய்க்கு அரிசி எப்படி வாங்க முடியும்? அனங்கா பட்டினி கிடந்து செத்துப் போவாள்.
மின்னல் சங்கேதம் – 7
கோபிநாத்பூர் போன்ற பெரிய சந்தையில் கூட அரிசி இல்லை. மக்கள் காலி கூடைகளோடு அலைந்து கொண்டிருந்தார்கள். சந்தைகளிலும், கடைகளிலும் புலம்பல்கள் ஒலித்தன. மூட்டை மூட்டையாக நெல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த குண்டுவின் கடையும் இப்போது காலியாகக் கிடந்தது. தெருவெங்கும் பிச்சைக்காரர்கள் நிறைந்திருந்தனர். இத்தனை நாட்களாய் இவர்கள் எங்கே இருந்தார்கள்? யாருக்கும் கேட்கும் தைரியம் இல்லை.
மின்னல் சங்கேதம் – 6
ஒருவேளை குண்டு மஷாயிடம் விலைக்குக் கொஞ்சம் கிடைக்கும் என்று அவரிடம் நபீனை அழைத்துச் சென்றார். அங்கேயும் அதே கதைதான். கடைக்குள் நுழையும்போது இடப்புறம் திரும்பிப் பார்த்தான். அங்கே மூங்கில் திண்ணை மேலே அரிசி மூட்டைகள் கூரை வரை அடுக்கியிருக்கும். இப்போது அங்கே காற்றாடிக்கொண்டிருந்தது.
மின்னல் சங்கேதம் – 5
ராதிகாப்பூர் சந்தையில், நிறைய மக்களின் கண் முன்னாலேயே, பாஞ்சு குண்டுவின் கடை கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி பட்டப்பகலில் இது போன்றதொரு சம்பவம் இதற்கு முன் இப்பகுதியில் நிகழ்ந்ததில்லை. கங்காசரணும் அப்போது அக்கடையில் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தான். கூரை வேயப்பட்ட அந்தக் கடை பெரியது. ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் நின்றிருந்தது. மக்கள் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்த சம்பவம் நிகழ்ந்தது. கடையைச் சுற்றி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை என்னவென்று புரியாமல் திகைப்போடு கங்காசரண் பார்த்தான். மக்கள் ஓலமிட்டுக்கொண்டு கடைக்கு உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பலர் திருட்டுப் பொருட்கள் நிறைந்த மூட்டைகளையும், கூடைகளையும் எடுத்துக்கொண்டு வயல்வெளிகளைத் தாண்டி ஆற்றங்கரையோரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.
மின்னல் சங்கேதம் – 4
அந்த விஷயத்தைச் சொன்னவன் ஒன்றும் விஷயம் தெரியாதவன் இல்லை. அவனுக்கு அரிசி வியாபரத்தில் ஏற்கனவே அனுபவம் உண்டு. அவன் உறுதியாகச் சொன்னான், “உங்களுக்கு இந்த விஷயம் புரிய மாட்டேங்குது. நான் சொல்றேன் கேளுங்க, அரிசி விலை எக்கச்சக்கமாகப் போகுது. எனக்கு இந்த விஷயமெல்லாம் அத்துபடி. இந்த வியாபாரத்துல நான் ரொம்ப நாள் இருந்திருக்கேன்.”