அவள் இதைப் பற்றிய பேச்சை எடுத்தால், அவன் முதலில் சிரிப்புடன் அதைப் புறந்தள்ள முயற்சி செய்வான். சிரிப்பு அவனுக்குக் கை கொடுத்துக் காப்பாற்றவில்லையென்றால் அவளைத் திட்டத் தொடங்குவான்.
Tag: வங்கச் சிறுகதை
தன்னிரங்கல்
அபினாஷ் வழக்கமாக ரொட்டியையும் உருளைக்கிழங்கு கறியையும் தன் காலையுணவாக எடுத்துக் கொள்வார்; அவருடைய மகன்கள் பூரியும் இனிப்பும் உண்பார்கள்; அவருடைய பேத்திகளால் பெரிய பூரியை வேகமாகச் சாப்பிட முடியாது, அதனால் அவர்களுக்கு விழுங்குவதற்குச் சுலபமானவை எதையாவது கொடுக்க வேண்டியிருக்கும்.
காதலும் அந்த பைத்தியக்காரனும்
அந்தப் பெண் மல்லி சித்தப்பாவிடம் அவர் அனைத்துப் பறவைகளையும் விடுவித்தால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லியிருந்தாள். அவரிடம் நான்கு காதற்கிளிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. மூன்று மஞ்சள் ஒரு நீலம். ஆனால் இதைப் படத்திலிருந்து உங்களால் சொல்ல முடியாது. அவை எல்லாம் கருப்பு வெள்ளை.